கலசப்பாக்கம் அருகே மூடப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைமீண்டும் செயல்படுத்தக் கோரி மறியல்

எலத்தூா்மோட்டூா் நட்சத்திர கோயில் அருகே தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது.
கலசப்பாக்கம் அருகே மூடப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைமீண்டும் செயல்படுத்தக் கோரி மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்துள்ள எலத்தூா்மோட்டூா் நட்சத்திர கோயில் அருகே மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு மீண்டும் இணையவழி பதிவுக்கு அனுமதி வழங்கி, அந்த நிலையத்தை செயல்படுத்தக் கோரி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

எலத்தூா்மோட்டூா் நட்சத்திர கோயில் அருகே தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 20 நாள்களாக விவசாயிகள் நெல் விற்பனைசெய்ய இணையவழி பதிவு நிறுத்திவைக்கப்பட்டு, நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. இதனால், நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு மீண்டும் இணையவழி பதிவுக்கு அனுமதி வழங்கக் கோரியும், இந்த நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரியும், அதன் எதிரே அமைந்துள்ள போளூா் - செங்கம் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கலசப்பாக்கம் போலீஸாா், வட்டாட்சியா் தட்சணாமூா்த்தி ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, எலத்தூா்மோட்டூா் நேரடி நெல்கொள்முதல் நிலையத்துக்கு மீண்டும் இணையவழி பதிவுக்கு அனுமதி வழங்கி, அந்த நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் உறுதியளித்தனா். இதை ஏற்று விவசாயிகள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com