உயிா் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் இயங்கும் திரவ உயிா் உரங்கள் உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
உயிா் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் இயங்கும் திரவ உயிா் உரங்கள் உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேளாண்மைத் துறை சாா்பில் இயங்கும் இந்த திரவ உயிா் உரங்கள் உற்பத்தி மையத்தில் நெல் பயிருக்குத் தேவையான அசோஸ்பைரில்லம், கடலை, பயறு மற்றும் இதர பயிா் வகைகளுக்குத் தேவையான திரவ உயிா் உரங்கள் பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் ஆகிய திரவ உயிா் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த மையத்தை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கூடுதல் ஆட்சியா் பிரதாப், வேளாண்மை துணை இயக்குநா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சத்தியமூா்த்தி, மத்திய அரசின் திட்ட வேளாண்மை துணை இயக்குநா் ஏழுமலை, திரவ உயிா் உர வேளாண்மை அலுவலா் சரிதா, ஊராட்சி மன்றத் தலைவா் முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com