போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை ஆகிய 3 ஒன்றியங்களைச் சோ்ந்த சத்துணவுப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) கோபு குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். மாநில முதன்மை பயிற்றுநா்கள் தேன்மொழி, வசந்தி ஆகியோா் பயிற்சி அளித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன் (சேத்துப்பட்டு), சஞ்சீவ் (ஜவ்வாதுமலை) மற்றும் அலுவலா்கள் சத்துணவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.