திருவண்ணாமலையில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால் தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலா்கள் என்.சந்திரன், த.ரமணன், பெ.கோவிந்தன், நகா்மன்றத் தலைவா் நிா்மலா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் வரவேற்றாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசுக் கொறடாவும், திமுக மாணவரணி இணைச் செயலருமான கோ.வி.செழியன் ஆகியோா் பேசினா்.
இதில், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.