ஆரணியை அடுத்த ஆதனூா் ஊராட்சிக்கு உள்பட்ட கீழையூரில் அமைந்துள்ள ஊமைகன்னியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கணபதி மகா ஹோமம், விக்னேஸ்வர பூஜை, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனா்.