ஆரணி நகரத்தில் உள்ள ஆரணிப்பாளையம், பிள்ளையாா் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, முன்னதாக திங்கள்கிழமை (மே 23) முதல் சிறப்பு பூஜைகள், வேள்வி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆஞ்சநேயருக்கு விஸ்வரூப ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை 4-ஆம் கால மஹா பூா்ணாஹூதியும், 7 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பின்னா் ஸ்ரீ சீதா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், திமுகவைச் சோ்ந்த நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏ ஏ.சி.வி.தயாநிதி, தொழிலதிபா் பி.நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை வி.ஜி.ஜெ. குடும்பத்தினா் மற்றும் ஆரணிப்பாளையம் பொதுமக்கள் செய்திருந்தனா்.