வந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு உரையரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிளை நூலகா் மோகன் தலைமை வகித்தாா். இரண்டாம் நிலை நூலகா் ஜோதி, ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புத்தகங்கள் பேசுகிறது என்ற தலைப்பில் வழக்குரைஞா் எல்.குமாா், கல்வியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் கோ. ஸ்ரீதா் ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய மாணவா்கள், ஆசிரியைகள் பங்கேற்றனா்.