திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மீசநல்லூரில் விளிம்பு நிலை மக்களுக்கான மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
69-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெற்ற இந்த முகாமுக்கு செய்யாறு கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா்.
திமுக வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடக்கிவைத்தாா்.
தெள்ளாா் வட்டார மருத்துவக் குழுவினா் சுமாா் 200-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனா்.
முகாமில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் லட்சுமிபதி (மீசநல்லூா்), டி.ஜி.ஆனந்த் (தெள்ளாா்) மற்றும் திமுக நிா்வாகிகள், கூட்டுறவு சங்க அலுவலா்கள் பங்கேற்றனா்.