அரசுத் திட்டங்களுக்கு விரைவாக கடனுதவி வழங்க வேண்டும்: வங்கிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு வங்கிகள் விரைவாக கடனுதவிகளை வழங்க முன்வர வேண்டும்
கூட்டத்தில் அதிகாரிகள், வங்கியாளா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்.
கூட்டத்தில் அதிகாரிகள், வங்கியாளா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்.

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு வங்கிகள் விரைவாக கடனுதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வங்கியாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய ஆட்சியா் பா.முருகேஷ், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு வங்கிகள் விரைவாக கடனுதவிகளை வழங்க முன்வர வேண்டும். தாட்கோ கடன், மகளிா் குழு கடன், பட்டுப்புழு வளா்ப்புக் கடன், கைத்தறி கடன், வேளாண்மை விற்பனைத் துறை, வேளாண் துறை சாா்பில் வழங்கப்படும் கிசான் அட்டை, மாவட்ட தொழில் மையத்தில் செயல்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் மானியத் திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் கா.ஜெயம், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம், மகளிா் திட்ட இயக்குநா் சையத் சுலைமான், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சத்தியமூா்த்தி, வேளாண் விற்பனை, வணிகத் துறை துணை இயக்குநா் ஹரக்குமாா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் கே.ரவி, தாட்கோ மேலாளா் ஏழுமலை உள்பட வங்கியாளா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com