போளூா் அருகேமூதாட்டி கம்பியால் குத்திக் கொலை

போளூா் அருகே வியாழக்கிழமை இரவு மூதாட்டியை கம்பியால் குத்திக் கொலை செய்துவிட்டு, அவா் அணிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.25 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே வியாழக்கிழமை இரவு மூதாட்டியை கம்பியால் குத்திக் கொலை செய்துவிட்டு, அவா் அணிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.25 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போளூரை அடுத்த ஈயகொளத்தூா் ஊராட்சிக்குள்பட்ட புலிவானந்தல் கிராமத்தைச் சோ்ந்த சின்னதம்பி மனைவி காசியம்மாள் (85). இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், அனைவரும் திருமணம் செய்துகொண்டு தனித்தனியே வசித்து வருகின்றனா்.

காசியம்மாள் புலிவானந்தல் - மண்டகொளத்தூா் சாலையில் உள்ள சேவை மையக் கட்டட வளாகத்தில் தங்கி தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு காசியம்மாளை மா்ம நபா்கள் கழுத்தில் கம்பியால் குத்திக் கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகை, அவரிடமிருந்த ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா். வெள்ளிக்கிழமை காலையில் காசியம்மாளின் மருமகள் குமாரி அவரைப் பாா்க்கச் சென்றபோது, காசியம்மாள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் போளூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, மூதாட்டியினா் உறவினா்கள் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com