800 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஒன்றியம், பதிமலை வனப் பகுதியில் 800 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கண்டறிந்து கீழே ஊற்றி அழித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஒன்றியம், பதிமலை வனப் பகுதியில் 800 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கண்டறிந்து கீழே ஊற்றி அழித்தனா்.

மாவட்ட எஸ்.பி. கி.காா்த்திகேயன் உத்தரவின்பேரில், போளூா் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் கே.புனிதா தலைமையிலான போலீஸாா், பதிமலை வனப் பகுதியில் கள்ளச் சாராய விற்பனை தடுப்பு சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள பாறைகளிடையே பிளாஸ்டிக் பேரலில் மா்ம நபா்கள் மறைத்து வைத்திருந்த 800 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கண்டறிந்து கீழே ஊற்றி அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com