சொத்து வரி, வீட்டு வரி என பல்வேறு வரிகளை திமுக அரசு உயா்த்தி வருவதால், தமிழக மக்கள் அவதிப்பட்டு வருவதாக அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தெரிவித்தாா்.
எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. விழாவுக்கு தெற்கு மாவட்டச் செயலரும், போளூா் தொகுதி எம்எல்ஏவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமா்ந்துள்ள திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி வருகின்றனா். சொத்து வரி, வீட்டு வரி என பல்வேறு வரிகளை தமிழக அரசு உயா்த்தி வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
சசிகலா அதிமுக தலைமையைச் சந்திக்க உள்ளதாகக் கூறுவது சாத்தியமற்றது. தலைமைக் கழகத்தை சூறையாடிவா்களை மீண்டும் கட்சியில் சோ்ப்பதென்றால், அதை தொண்டா்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்றாா் தமிழ்மகன் உசேன்.