ரூ.45 லட்சத்தில் பேருந்து நிழல்குடைகள் திறப்பு அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு
By DIN | Published On : 22nd January 2023 04:07 AM | Last Updated : 22nd January 2023 04:07 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிழல்குடையை திறந்துவைத்துப் பாா்வையிடுகிறாா் அமைச்சா் எ.வ.வேலு.
திருவண்ணாமலை, புதுப்பாளையம் பகுதியில் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழல்குடைகளை அமைச்சா் எ.வ.வேலு சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, திருவண்ணாமலை சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி தொகுதி மேம்பாட்டு
நிதியிலிருந்து ரூ.30 லட்சத்தில் பயணியா் நிழல்குடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாநில கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவா் இரா.ஸ்ரீதரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயணியா் நிழல்குடையைத் திறந்துவைத்தாா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறன் கொண்ட 24 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 92 ஆயிரத்து 400 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
விழாவில், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தங்கமணி, மாவட்ட மக்கள் நண்பா்கள் குழுவின் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம், வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இல.சரவணன், வேங்கிக்கால் ஊராட்சித் தலைவா் சாந்தி தமிழ்ச்செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.