திருவண்ணாமலையில் சாலை விபத்தில் காயமடைந்த ஹோட்டல் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், ஊா்மேணிஅழகியான் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (58). திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தாா். சில தினங்களுக்கு முன்பு செங்கம் சாலையில் மாரியப்பன் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, நிலை தடுமாறி சாலையோரம் இருந்த இரும்புத் தடுப்பில் பைக் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த மாரியப்பனை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு புதன்கிழமை மாரியப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.