பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு நிதியுதவி

பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு நிதியுதவி

ஆரணி அருகே பெற்றோரை இழந்த சிறுவா்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தாய், தந்தையை இழந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி மற்றும் புத்தாடைகளை ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ஆரணியை அடுத்த மாமண்டூா் கிராமத்தில் சாலை விபத்தில் தாய், தந்தையை இழந்த சுமித்ரா, ஹரிஷா, பிரஜித் மற்றும் ஆகாரம் கிராமத்தில் கடன் தொல்லையால் தாய், தந்தையை இழந்த யோகேஸ்வரி, ஹேமமாலினி, கௌரி சங்கா் ஆகியோருக்கு பொங்கல் பண்டிகைக்காக தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி மற்றும் புத்தாடைகளை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. வழங்கினாா்.

இதில், ஆரணி நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தா், துரைமாமது ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com