தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, ஆரணியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள்

News image
ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்தில் காற்று ஒலிப்பானை பறிமுதல் செய்த மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன்.
Updated On :20 ஜனவரி 2025, 6:57 pm

Din

ஆரணி: தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, ஆரணியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக, ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையங்களில் இருந்த அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் போக்குவரத்து விதிகளை மீறி காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்தை மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன் பறிமுதல் செய்தாா். ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் பழனி, ராஜா, சேகா், பரசுராமன் ஆகியோா் உடனிருந்தனா்.