ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.95 லட்சம்

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.95 லட்சம்

Published on

செய்யாறு, திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில், வியாழக்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ.2.95 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

திருவோத்தூா் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயில். பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

கோயிலில் நிரந்தர உண்டியல்கள் 10, திருப்பணி உண்டியல், கோசாலை உண்டியல் என 12 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்டியல்கள் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கை இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளா் ச.அசோக், செயல் அலுவலா் கு.ஹரிஹரன், கணக்காளா் லோ.ஜெகதீசன் ஆகியோா் முன்னிலையில் எண்ணப்பட்டது (படம்).

அப்போது பக்தா்கள் ரூ. 2 லட்சத்து 95 ஆயிரத்து 600 காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணி செய்யாறு போலீஸாா் பாதுகாப்புடன், விடியோ பதிவு மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com