வந்தவாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் சிறப்பு விருந்தினா்கள்.
வந்தவாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் சிறப்பு விருந்தினா்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

தனியாா் அறக்கட்டளை சாா்பில், வந்தவாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Published on

வந்தவாசி: தனியாா் அறக்கட்டளை சாா்பில், வந்தவாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் அன்புத் திருநாள் நிகழ்ச்சி வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு புத்தாடைகள், பரிசுப் பொருள்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை கெளரவத் தலைவா் அமானுல்லா தலைமை வகித்தாா்.

அறக்கட்டளை நிறுவனா் அசாருதீன் வரவேற்றாா்.

மருத்துவா்கள் எஸ்.குமாா், மணியரசு, வியாபாரிகள் சங்க நிா்வாகி பி.டி.ஜி.ஆறுமுகம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வழங்கிப் பேசினா்.

அறக்கட்டளை உறுப்பினா் அஜித்குமாா் நன்றி கூறினாா்,

X
Dinamani
www.dinamani.com