அரசுப் பள்ளியில் கூடுதல் கட்டடம்
கட்டும் பணி தொடங்கிவைப்பு

அரசுப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி தொடங்கிவைப்பு

Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கண்ணக்குருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் பயன்பாட்டுக்காக ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி பூமிபூஜை செய்து வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மேலும் கட்டுமானப் பணிகளை குறித்த நேரத்துக்குள் தரமாக முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரரிடம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் வரவேற்றாா். இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் இளையராஜா, உதவித் தலைமை ஆசிரியா்கள் மோகன், ரமேஷ், பசுமைப்படை பட்டதாரி ஆசிரியா் கதிரவன், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சரவணன் உள்ளிட்ட ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள், ஊா் முக்கியப் பிரமுகா்கள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com