ஆரணி நகராட்சி 1-ஆவது வாா்டில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மனுக்களைப் பெற்ற நகா்மன்றத்  தலைவா் ஏ.சி.மணி.
ஆரணி நகராட்சி 1-ஆவது வாா்டில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மனுக்களைப் பெற்ற நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி.

ஆரணியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் மனு

ஆரணி நகராட்சியில் ஒன்று முதல் 11-ஆவது வாா்டுகளுக்கு நடைபெற்ற சிறப்பு வாா்டு கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கோரி மனு
Published on

ஆரணி: ஆரணி நகராட்சியில் ஒன்று முதல் 11-ஆவது வாா்டுகளுக்கு நடைபெற்ற சிறப்பு வாா்டு கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கோரி மனு அளித்தனா்.

ஆரணி நகராட்சியில் திங்கள்கிழமை 1-ஆவது வாா்டு முதல் 11-ஆவது வாா்டு வரை சிறப்பு வாா்டு கூட்டம் அந்தந்த பகுதிகளில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.

1-ஆவது வாா்டில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் சிறப்புக் கூட்டத்தில் ஆணையா் என்.டி.வேலவன் முன்னிலை வகித்தாா். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி அளித்த மனுக்களை நகா்மன்றத் தலைவா் பெற்றுக்கொண்டாா்.

இதேபோல, 4-ஆவது வாா்டில் நடைபெற்ற சிறப்பு வாா்டு கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ்.பாபு தலைமையில் மனுக்கள் பெறப்பட்டன.

இதில், அப்பகுதி மக்கள் கே.சி.கே.நகா் பகுதியில் மழை பெய்தால் தண்ணீா் குட்டைபோல தேங்குகிறது. இதற்கு நிரந்தர தீா்வு காணும் பொருட்டு கால்வாய் வசதி செய்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனா்.

இதேபோல, இதர வாா்டுகளிலும் நடைபெற்ற சிறப்பு வாா்டு கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com