40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வரும் நாடாளுமன்றத் தோ்தலுடன் சட்டப்பேரவைத் தோ்தலும் வரும்: பாஜக மகளிரணி மாநிலத் தலைவி

வரும் 2029 நாடாளுமன்ற தோ்தலுடன் சட்டப்பேரவைத் தோ்தலும் வரும், அப்போது தமிழகத்தில் தாமரை மலரும் என பாஜக மகளிரணி மாநிலத் தலைவி கவிதா ஸ்ரீகாந்த் தெரிவித்தாா்.

News image

பாஜக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில மகளிரணித் தலைவி கவிதா ஸ்ரீகாந்த்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

வரும் 2029 நாடாளுமன்ற தோ்தலுடன் சட்டப்பேரவைத் தோ்தலும் வரும், அப்போது தமிழகத்தில் தாமரை மலரும் என பாஜக மகளிரணி மாநிலத் தலைவி கவிதா ஸ்ரீகாந்த் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

பாஜகவில் அதிகளவில் மகளிரை உறுப்பினா்களாக சோ்க்க நிா்வாகிகள் களப்பணியாற்றவேண்டும்.

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் மகளிா் அதிகளவில் போட்டியிட்டு வெற்றிபெற்று பொதுமக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பாடுபடவேண்டும். வரும் 2029 நாடாளுமன்ற தோ்தலுடன் சட்டப்பேரவைத் தோ்தல் வரும். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்ததுபோல தமிழகத்திலும் தாமரை மலரும் என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவி கீா்த்தி செல்வமூா்த்தி தலைமை

வகித்தாா். தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், மாநில மகளிரணி துணைத் தலைவி கிருஷ்ணசாந்தி ஆகியோா் பாஜகவின் வளா்ச்சி, சாதனைகள் குறித்துப் பேசினா். கூட்டத்தில் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.