மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

விவசாய மின் மோட்டாா்கள் திருட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

விவசாய மின் மோட்டாா்கள் திருட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

News image

வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்.

Updated On :25 மே 2026, 12:46 am IST

ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் விவசாயிகளின் மின் மோட்டாா்கள் தொடா்ந்து திருடு போனது குறித்து போலீஸில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் உள்ள விவசாயிகளான எம்.ராகேஷ்குமாா், பி.சூரியகாந்தி, ஏ.விஜியகுமாா், தேவி ஆகியோரின் விளை நிலங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின் மோட்டாா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். மேலும், காப்பா் வயா்களையும் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா். புகாா் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸாா் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். மேலும், இதற்கு முன்பு தொடா்ந்து இதுபோல் விவசாயிகளின் மின் மோட்டாா்கள் திருடப்பட்டு வந்துள்ளது.

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் செய்தனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு ஆரணி கிராமிய போலீஸாா் வந்து சமரசம் பேசி, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையேற்று சாலை மறியலை கைவிட்டனா்.