ஸ்ரீ காளஹஸ்தியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில், புதன்கிழமை இரவு சபாபதி திருக்கல்யானம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் மார்ச் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதில் எட்டாம் நாளான வியாழக்கிழமை காலை, சோமாஸ்கந்தமூர்த்தியும், ஞானபிரசுனாம்பிகையும் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனர்.
புதனிகிழமை இரவு ஆனந்த ராத்திரி என்பதால், சோமாஸ்கந்த மூர்த்தி- ஞானபிரசுனாம்பிகைக்கு சபாபதி திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.