குடியாத்தத்தை அடுத்த கல்மடுகு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் ஆடி மாத 3-ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம், திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கே.கருணாமூர்த்தி, நாட்டாண்மை
கே.எஸ். பிரகாசம், தர்மகர்த்தா ஜி. ரவி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ வி.ஜி. தனபால் அன்னதானத்தை தொடக்கி வைத்தார். ஜி.எஸ்.கே. குழும ஜி. அசோக்குமார் திருவிளக்கு பூஜையை தொடக்கி வைத்தார்.