மின்சாரம் பாய்ந்ததில் மாணவர் உள்பட இருவர் சாவு

வேலூரில் வெவ்வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவர் உள்பட இருவர் இறந்தனர்.
Updated on
1 min read

வேலூரில் வெவ்வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவர் உள்பட இருவர் இறந்தனர்.
காட்பாடி அருகே பனமடங்கி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுரேஷின் மகன் சுபாஷ் (14). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த இவர், புதன்கிழமை துணி காய வைத்தபோது தவறுதலாக மின் கம்பியைத் தொட்டாராம். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுபாஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து பனமடங்கி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, வேலூர் அருகே நாகநதி மேற்கு கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் துரை (42). பாகாயம் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்த இவர், வியாழக்கிழமை சாத்துமதுரை பகுதியில் மின் இணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட துரை நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து வேலூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com