140 குடும்பங்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை: எம்எல்ஏ தகவல்

வேலூர் அருகே அரசால் இடம் மாற்றம் செய்யப்பட்ட 140 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகசட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தெரிவித்தார்.
Published on
Updated on
1 min read

வேலூர் அருகே அரசால் இடம் மாற்றம் செய்யப்பட்ட 140 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக
சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தெரிவித்தார்.
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியர் பழனி முன்னிலை வகித்தார்.
இதில் பங்கேற்ற அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அளித்த மனு குறித்து கூறியது:
இலங்கை மன்னனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக அப்பகுதியில் வசித்து வந்த சுமார் 140 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பலவன்சாத்து பாரதி நகருக்கு அதிகாரிகளால் இடம் மாற்றப்பட்டனர். ஆனால் இவர்களுக்கு இதுவரையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
 அரசால் இடமாற்றம் செய்யப்பட்ட 140 குடும்பங்களுக்கு ஜமாபந்தியில் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் சார்பில் கேட்டுக் கொண்டதால், பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றார். இதுதவிர, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
 சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் நெடுமாறன், வட்ட வழங்கல் அலுவலர் இளஞ்செழியன், வருவாய்த் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com