சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வாலாஜாபேட்டை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் எதிரே சாலைப் பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
Updated on
1 min read

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வாலாஜாபேட்டை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் எதிரே சாலைப் பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் த.ப.வெங்கடேசன் தலைமை வகித்தார். வட்டத் துணைத் தலைவர் எம்.பழனி வரவேற்றார்.  இதில், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்காக மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சியிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டத்தைக் கைவிட வேண்டும். 5000-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com