ஜமாபந்தி நிறைவு நாளில் 384 மனுக்கள் பெறப்பட்டன

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 384 மனுக்கள் பெறப்பட்டன.
Updated on
1 min read

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 384 மனுக்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர் ஆர்.ராமலிங்கம் வரவேற்றார். வருவாய் தீர்வாய அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருமான எம்.ஜெயபிரகாஷ் தலைமை வகித்து, நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 384 மனுக்களில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இயற்கை மரணம் அடைந்த குடும்பத்தினருக்கு ரூ. 1,35,500 வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர்கள் பி.கிருஷ்ணவேணி, ஆர்.குமார், வருவாய் அலுவலர் திருமலை, கிராம நிர்வாக அலுவலர் சுந்தரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வட்ட வழங்கல் அலுவலர் ராஜகோபால் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com