ஆம்பூர் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை மையம் அமைப்பது குறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ஆம்பூரில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நடந்து வரும் பணிகள் குறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆம்பூர் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை மையம் அமைப்பது குறித்தும், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நடந்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் ஆம்பூர் நகரைச் சேர்ந்த சிலரை மட்டுமே அழைத்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையறிந்து அங்கு சென்ற சிலர் ஆம்பூர் நகரின் அனைத்துக் கட்சியினர், அனைத்து சேவை அமைப்பின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தாமல் சிலரை மட்டுமே அழைத்து ரகசியமாக ஆலோசனை நடத்துவது சரியில்லையென எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.