கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: போலீஸில் புகார்

ஆம்பூரில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

ஆம்பூரில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திர பிரசாத், வருவாய்த்துறையினர் ஆம்பூர் கெங்காபுரம் பாலாற்றுப் பகுதியில் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.  அப்போது, அங்கு டிராக்டர் மூலம் மணல் கடத்துவது தெரியவந்தது.  வருவாய்த்துறையினரை கண்டதும் மணல் கடத்தியவர்கள் டிராக்டரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதைத்தொடர்ந்து, அதிகாரிகள்  டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், ஆம்பூர் ஆயிஷா பீ நகர் பகுதியில் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற டிராக்டரை கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரபிரசாத் தடுத்து நிறுத்தினார்.  
அந்த டிராக்டரின் ஓட்டுநரான ஆம்பூரைச் சேர்ந்த ஜெயபால், ராஜேந்திர பிரசாத் மீது கல்வீசி தாக்க முயன்றார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திர பிரசாத், ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்
பதிந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான ஜெயபாலை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com