ஜவ்வாதுமலை பீமன் நீர்வீழ்ச்சியில் "செல்பி' எடுத்தவர் தவறி விழுந்து சாவு

ஜவ்வாதுமலை பீமன் நீர் வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்  தவறி விழுந்து இறந்தார்.
Updated on
1 min read

ஜவ்வாதுமலை பீமன் நீர் வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்  தவறி விழுந்து இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே பீமன் நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு தொடர் மழையின் காரணமாக தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்த சுல்தான் மகன் முபாரக் (19)  குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை பீமன் நீர்வீழ்ச்சிக்கு சென்றார். அப்போது முபாரக் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது  செல்லிடப்பேசியில் தண்ணீர் கொட்டும் பாறை மீது ஏறி செல்பி எடுத்துள்ளார். இதில் நிலை தடுமாறிய முபராக் பாறையிலிருந்து தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.  பலத்த காயமடைந்த முபாரக்கை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு  முபாரக் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார்.
இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com