வேலூரில் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்கள் காலை அப்பள்ளிக்கு வந்தனர். அப்போது, ஸ்மார்ட் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.
இதுதொடர்பாக அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் சையத்காலித்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அவர் பள்ளிக்கு வந்து பார்த்தபோது ஸ்மார்ட் வகுப்பறையில் இருந்த எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே சில மாதங்களுக்கு இப்பள்ளியில் முன் இருமுறை திருட்டுச் சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மந்திகுளம் தொழில்சாலை மாசுகளால் பொதுமக்கள் அவதி நடவடிக்கைக் கோரி மனு

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் நடமாடிய காட்டு யானை வனப் பகுதியில் விரட்டியடிப்பு

ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழப்பு
இன்றைய ராசி பலன் (19.05.2026) - கும்பம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
