தந்தையை கொலை  செய்ததாக மகன் கைது

திருப்பத்தூரில் மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்ததாக மகனை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பத்தூரில் மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்ததாக மகனை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர், சிவராஜ்பேட்டை ஜெயாநகரைச் சேர்ந்தவர் மனோகரன். ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்பு காவல் உதவி ஆய்வாளர். இவருக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். 
இவரது மனைவி அண்மையில் இறந்தார். இவரது முதல் மகன் ராஜ்குமார் கடந்த ஆண்டு விவாகரத்து ஆகி தனது தந்தை மனோகரனுடன் வசித்து வந்தார். 
ராஜ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தனது தந்தையுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். 
இந்நிலையில், ராஜ்குமாருக்கும், மனோகருக்கும் இடையே சனிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, வீட்டிலிருந்த இரும்புக் கம்பி மற்றும் மண்வெட்டியைக் கொண்டு மனோகரனை ராஜ்குமார் தாக்கினார். இதில், மனோகரன் நிகழ்விடத்திலேயே இறந்தார். 
இதையடுத்து மனோகரனின் சகோதரர் மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com