பேருந்திலிருந்து இறங்கிய பெண் தவறி விழுந்து சாவு

ஆற்காடு அருகே பேருந்தில் இருந்து இறங்கிய பெண் தவறி விழுந்து உயிரிந்தார்.

ஆற்காடு அருகே பேருந்தில் இருந்து இறங்கிய பெண் தவறி விழுந்து உயிரிந்தார்.
ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் சாதிக்பாஷா நகரைச் சேர்ந்தவர் அமுமா (40). தொழிலாளியான இவர், கடந்த சனிக்கிழமை வேலூர் சென்றுவிட்டு, மீண்டும்  வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 
மேல்விஷாரம் புறவழிச் சாலை தனியார் மருத்துவமனை நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கியபோது தவறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது. 
இதில் பலத்த காயம் அடைந்த  அமுமா, மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். 
இதுகுறித்த  புகாரின் பேரில்,  ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com