அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி சார்பில், பேர்ணாம்பட்டை அடுத்த எருக்கம்பட்டில் மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கல்வி உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் பேர்ணாம்பட்டு ஒன்றியச் செயலர் பி. இளையராஜா தலைமை வகித்தார். நகர தலைவர் ஜி.பி. தாசன் வரவேற்றார். மாவட்டச் செயலர் எஸ். பாபு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏ.டி. விஸ்வநாத், எஸ்.சக்கரவர்த்தி, அமைப்பின் நிர்வாகிகள் ஜி. ஜெகன்நாதன், கே. பாலாஜி, ஆர்.கே. குப்புசாமி, எஸ். ரேணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.