பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்கக் கோரி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா-எஸ்டிபிஐ

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்கக் கோரி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா-எஸ்டிபிஐ சார்பில் ஆம்பூர் சார்-நிலை கருவூல அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ வேலூர் மாவட்டத் தலைவர் பையாஸ்அஹமத் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலர் சுஹேப்முஹமத் வரவேற்றார். கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முஸ்தபா மற்றும் மாநிலத் துணைத் தலைவர் முஹம்மத்ஆசாத், மாவட்டப் பொதுச் செயலாளர் பஷீர்அஹமத், சையத்அலி பாத்திமா உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆம்பூர் நகர போலீஸார் கைது செய்தனர். 
ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் நசீர் அகமது தலைமை வகித்தார். 
நகரச் செயலர் பயாஸ் அகமத், இளைஞரணிச் செயலர் ஹாபிஸ் அப்துல், ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர் எஸ்.மைதீன் சேட்கான் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி, உரையாற்றினார்.
மாவட்டச் செயலர் சையத் ஜாவித் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி, டி.எஸ்.பி. ஜேசுராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com