பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பாராட்டு

தேசிய பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தார். வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு

தேசிய பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் மையத்தில் பயிற்சி பெற்று அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் கடந்த நவம்பர் 26 முதல் 30 வரை நடந்த தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற வீராங்கனைகளும், கேரள மாநிலம், கோழிகோட்டில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற வீரர்களும் ஆட்சியரை வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றமைக்காக ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com