திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு திறன் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயகாந்தம் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் சங்க இணைத் தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூயநெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் பொன்.செல்வகுமார் கலந்துகொண்டு கண்ணதாசன் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற கட்டுரை மற்றும் பாடல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ரஜினி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். உதவித் தலைமை ஆசிரியை லட்சுமி நன்றி கூறினார்.