அரசு வழக்குரைஞர் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராக அரக்கோணத்தைச் சேர்ந்த ஆர்.பிரதாப்குமார்  நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராக அரக்கோணத்தைச் சேர்ந்த ஆர்.பிரதாப்குமார்  நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராக அரக்கோணம் வழக்குரைஞர் ஆர்.பிரதாப்ரகுமாரை நியமித்து மாநில அரசு அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை கிளை ஆலோசித்த பின்னர் இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஆர்.பிரதாப்குமார் 2011 முதல் 16 வரை சென்னை உயர் நீதிமன்ற குற்றவியல் அரசு வழக்குரைஞர் பொறுப்பிலும், தொடர்ந்து 2016 முதல் தற்போது வரை சென்னை உயர் நீதிமன்ற அரசு பிளீடராகவும் பணியாற்றி வருகிறார். 
கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராக ஆர்.பிரதாப்குமார் நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு அரக்கோணம் வழக்குரைஞர் சங்கத்தினர் மற்றும் நகர முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com