ஆசிரியர் கூட்டணியின் ஐம்பெரும் விழா

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வேலூர் மாவட்ட கிளையின் ஐம்பெரும் விழா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வேலூர் மாவட்ட கிளையின் ஐம்பெரும் விழா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கு பெற்றவர்களுக்கு பாராட்டு, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு, வட்டார பொறுப்பாளர்கள் பதவியேற்பு, பயிற்சி பட்டறை முகாம் தொடக்கம் ஆகிய ஐம்பெரும் விழாவுக்கு, கூட்டணியின் மாவட்டத் தலைவர் எஸ். முகமது அஜ்மல் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் கவிஞர் பா. உதயகுமார் வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர் இரா. தாஸ் பங்கேற்று, ஆசிரியர்களை கௌரவித்துப் பேசியதாவது: ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 24-ஆம் தேதி மாவட்ட அளவில் நடைபெறும் பேரணி, மே 8-ஆம் தேதி மாநில தலைநகரில் நடைபெறும் பேரணி ஆகியவற்றில், ஆசிரியர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
 மாநிலத் தலைவர் அ. நடராஜன், மாநில மகளிர் அணி நிர்வாகிகள் ஆபிதா நஸ்ரின், சண்முக வடிவு, கிருஷ்ணகுமாரி, பேர்ணாம்பட்டு வட்டாரச் செயலாளர் டி.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com