குடியாத்தம் புதுப்பேட்டை திருவள்ளுவர் தொடக்கப் பள்ளியில் பணி நிறைவு பெறும், பள்ளித் தலைமை ஆசிரியர் எம். குணசேகரன், ஆசிரியைகள் ஆர். சிறைவாணி, பி. கல்யாணி ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி நிர்வாகி கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியை என். மலர்க்கொடி வரவேற்றார். பள்ளித் தலைவர் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கினர். உதவித் தலைமை ஆசிரியர் டி. நாகபூஷணம் நன்றி கூறினார்.