வேலூர் அருகே இரு பெண்கள் உள்பட மனநலம் பாதிக்கப்பட்ட 6 பேர் மீட்கப்பட்டனர்.
வேலூர் அருகே உள்ள கொணவட்டம், சத்துவாச்சாரி, காட்பாடி ஆகிய சுற்றுப் பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 2 பெண்கள் உள்பட 6 பேரை திருப்பத்தூர் மனநல காப்பகத்தின் செயலாளர்
சொ.ரமேஷ் தலைமையிலான குழுவினர் மீட்டு, ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின்பேரில், மனநல மருத்துவர் ரம்யா முன்னிலையில், மீட்கப்பட்ட 6 பேரும் வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.