மாநில அளவிலான குழுப் போட்டிக்கு வேலூர் சிருஷ்டி மெட்ரிக். பள்ளி மாணவர் தகுதி பெற்றுள்ளார்.
மண்டல அளவில் மாணவர்களுக்கான குழுப் போட்டிகள் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், வேலூர் சிருஷ்டி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜிஷ்ணு, மூத்தோர் பிரிவு ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளியின் தலைவர்
எம்.எஸ்.சரவணன், கல்வியியல் ஆலோசகர் கீதா நந்தகுமார், முதல்வர் எஸ்.பூர்ணிமா, உடற்கல்வி ஆசிரியர் ஏ.குமரன் உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்தனர்.