சென்னையில் இருந்து பாலக்காடுக்கு புறப்பட்ட விரைவு ரயிலின் என்ஜின் அரக்கோணம் அருகே வியாழக்கிழமை பழுதானது.
சென்னையில் இருந்து பாலக்காடுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட விரைவு ரயில் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் என்ஜின் பழுதானதால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக, அரக்கோணம் ரயில் நிலையம் வரை மெதுவாக ரயில்
இயக்கப்பட்டது.
இதையடுத்து பழுதை நீக்க அரக்கோணம் ஏசி லோகோ பணிமனைப் பொறியாளர்கள் முயன்ற நிலையில், பழுது நீக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மாற்று என்ஜின் இணைக்கப்பட்டு, நள்ளிரவு 12.35-க்கு சென்னை-பாலக்காடு விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.