பேர்ணாம்பட்டு அருகே கணவனைக் கத்தியால் குத்திக் கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
பேர்ணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி செந்தில்குமார் (30)(படம்). இவரது மனைவி ரேவதி (25). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். செந்தில்குமார் சில மாதங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்தாராம். அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், ஞயிற்றுக்கிழமை தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது வீட்டில் இருந்த பேனா கத்தியால் செந்தில்குமாரை ரேவதி குத்தினாராம். இதில் காயமடைந்த செந்தில்குமார் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செந்தில்குமார் ஏற்கெனவே இறந்து விட்டாகத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மேல்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, ரேவதியை கைது செய்தனர். அவரிடம் டிஎஸ்பி எம்.பிரகாஷ்பாபு விசாரணை நடத்தி வருகிறார்.