விவசாயி வீட்டில் 8 சவரன் நகை திருட்டு

ஒடுக்கத்தூரில் விவசாயி வீட்டில் 8 சவரன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

ஒடுக்கத்தூரில் விவசாயி வீட்டில் 8 சவரன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
ஒடுக்கத்தூர் பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி வேலு.  இவர் சனிக்கிழமை வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். 
மாலையில் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com