ஒடுக்கத்தூரில் விவசாயி வீட்டில் 8 சவரன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஒடுக்கத்தூர் பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி வேலு. இவர் சனிக்கிழமை வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
மாலையில் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.