அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

அண்ணாவின் 110-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி அதிமுகவினர் சனிக்கிழமை ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அண்ணாவின் 110-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி அதிமுகவினர் சனிக்கிழமை ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான சு.ரவி தலைமையில், அரக்கோணம் எம்.பி. அரி, கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜி.லோகநாதன் உள்ளிட்டோர் வாலாஜாபேட்டையில் காந்தி சிலை அருகே இருந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தொடர்ந்து பெரியார், எம்ஜிஆர், அம்பேத்கர் சிலைக்ளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவில் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் சி.ஏழுமலை, வி.ராமு, எம்ஜிஆர் மன்றச் செயலாளர் பி.நாராயணன், ஒன்றியச் செயலாளர்கள் ச.கார்த்திகேயன், எம்.சி. பூங்காவனம், நகரச் செயலாளர் டபிள்யூ. ஜி.மோகன், எஸ்.எம்.சுகுமார், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்
எம்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டையில்...
வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் வி.சி.மோட்டூர், வாலாஜாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், பொதுக்குழு உறுப்பினர் க.சுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் வசந்திரவி, ஒன்றியச் செயலாளர் சேஷாவெங்கட், நகரச் செயலாளர்கள் பா.புகழேந்தி, டி. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சோளிங்கரில்...
சோளிங்கர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ரெண்டாடி மற்றும் குளத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு, சோளிங்கர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ச.கார்த்திகேயன் தலைமை வகித்து, அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளர் கா.முல்லை வேந்தன் நிர்வாகிகள் ஜெகநாதன், வேலம் கணேசன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூரில்...
 வேலூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாநில உயர்மட்டக் குழு உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான கே.கே.மணி மாலை அணிவித்தார்.
இதில், நகர எம்ஜிஆர் மன்றச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் விஸ்வநாதன், ஒன்றியச் செயலாளர்கள் சிவகுமார் (ஜோலார்பேட்டை), ந.சிவகுமார் (திருப்பத்தூர்), பெருமாள் (ஆலங்காயம்), நகரச் செயலாளர்கள் பொன்னுசாமி, ராஜேந்திரன், அப்துல் ரஹீம், வேணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணிச் செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.
அரக்கோணத்தில்...
 அரக்கோணம் நகர அதிமுக சார்பில் ஓடியன்மணி ரவுண்டானா அருகில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். அரக்கோணம் எம்.பி அரி, எம்எல்ஏ சு.ரவி ஆகிய இருவரும் இணைந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மீனவரணி செயலர் செல்வம், மாவட்ட அதிமுக முன்னாள் பொருளாளர் காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
திமுக: அரக்கோணம் சுவால்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரப் பொறுப்பாளர் வி.எல்.ஜோதி தலைமை வகித்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்டப் பொருளாளர் மு.கன்னைய்யன், மாவட்ட துணைச் செயலர் ராஜ்குமார், நகர நிர்வாகிகள் எஸ்.மணி, விக்கிரமன், கோ.வ.தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் நகர துணைச் செயலர் அன்பு லாரன்ஸ் தலைமை வகித்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். நகர நிர்வாகிகள் வி.எஸ்.ஆர்.ரவிச்சந்திரன், என்.அரி, விமலாவில்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் பிரசாத் தலைமையில் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ராஜா, நகரப் பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலைஞர்தாசன் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அமமுக: அமமுக சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணிக்கு, நகர அமமுக செயலரும், நகர்மன்ற முன்னாள் தலைவருமான எஸ்.கண்ணதாசன் தலைமை வகித்து, நகரில் உள்ள அனைத்து அண்ணா சிலைகளுக்கும் மாலை அணிவித்தார்.
இதில், மாவட்டப் பொருளாளர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் கன்னியப்பன், நெமிலி கிழக்கு ஒன்றிய அமமுக செயலர் கோ.சி.மணிவண்ணன், அரக்கோணம் ஒன்றியச் செயலர் துளசிராமன், நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நெமிலி யில்...
நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற ஊர்வலத்துக்கு ஒன்றியச் செயலர் பெ.வடிவேலு தலைமை வகித்தார். நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், நெமிலி பேரூராட்சி திமுக பொறுப்பாளர் ஜனார்தனன், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பவானி, ஒன்றிய நிர்வாகிகள் பார்த்தசாரதி, தனசேகரன், ஜெயராமன், நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் நகர அதிமுகவினர் கட்சியின் நகரச் செயலர் ஜே.கே.என். பழனி தலைமையில் நகராட்சி அலுவலகம் அருகிலிருந்து ஊர்வலமாகச் சென்று தாழையாத்தம் பஜாரில் எம்ஜிஆர் சிலை அருகே அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எம். பாஸ்கர், துணைச் செயலர் ஆர். மூர்த்தி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், வழக்குரைஞர்
கே.எம். பூபதி, நகர நிர்வாகிகள் எஸ்.ஐ. அன்வர் பாஷா, எஸ்.என். சுந்தரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கே.வி. குப்பத்தில்...
கே.வி. குப்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு எம்எல்ஏ ஜி.லோகநாதன் மாலை அணிவித்தார். இதில், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர்
வி.ராமு, ஒன்றியச் செயலர் கே.எம்.ஐ. சீனிவாசன், பொருளாளர் டி. கோபி, அவைத் தலைவர் தேவன், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் வனராஜ், முகிலன், மாவட்ட விவசாயப் பிரிவு பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூரில்...
 ஆம்பூர் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் எம். மதியழகன் தலைமையில் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் ஆர்.வெங்கடேசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஜி.ஏ. டில்லிபாபு, கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் பிரகலாதன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மணி, சீனிவாசன், அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் தலைமையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் நகரச் செயலாளர் ஆர்.எஸ். ஆனந்தன், எல்பிஎப் நிர்வாகி மதி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரபீக் அஹமத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமமுக சார்பாக வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நகரச் செயலாளர் சமரசன், நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன், சக்கரபாணி, ஜமீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் அப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அப்பகுதியின் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்தனர்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் அதன் மாவட்டப் பொருளாளர் கார்மேகம் ஆம்பூரில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார்.
மாதனூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் ஜோதிராமலிங்கராஜா தலைமயில் அதிமுகவினர் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
மாதனூர் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார் பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
ஆற்காட்டில்...
ஆற்காடு நகர அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளர் எம்.சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட எம் ஜிஆர் மன்றத் துணைச் செயலாளர் ஏ.வி.சாரதி, பொதுக்குழு உறுப்பினர்
தா.கு.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
திமுக சார்பில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
அமமுக சார்பில் நகரச் செயலாளர் ஐயப்பன், பொருளாளர் கருணாநிதி ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ஆற்காடு ஒன்றிய அதிமுக சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஒன்றியச் செயலாளர் எம்.குட்டி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நிர்வாகிகள் சிகாமணி, கே.கோகுல்நாத், எஸ்.ஆர்.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com