கடையில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

வாணியம்பாடியில் செல்லிடப்பேசி ரீசார்ஜ் கடையில் ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

வாணியம்பாடியில் செல்லிடப்பேசி ரீசார்ஜ் கடையில் ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி சி.எல்.சாலையில் புத்தகக் கடை மற்றும் செல்லிடப்பேசி ரீசார்ஜ் கடை நடத்தி வருபவர் சதீஷ் (38). வியாழக்கிழமை இரவு கடையின் கதவை மூடிவிட்டு அருகில் உள்ள கழிப்பறைக்கு சதீஷ் சென்றாராம். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது கடையில் இருந்து மர்ம நபர் ஒருவர் ஓடினார். 
சந்தேகமடைந்த சதீஷ் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். உதவி ஆய்வாளர் பிரகாசம் மற்றும் போலீஸார் அங்கு சென்று கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சிறுவன் ஒருவன் கல்லாப் பெட்டியை திறந்து பணத்தைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அச்சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com