சாலைப் பள்ளத்தில் சிக்கிய லாரி

திருப்பத்தூரில் சாலைப் பள்ளத்தில் லாரி சிக்கி விபத்துக்குள்ளானது.

திருப்பத்தூரில் சாலைப் பள்ளத்தில் லாரி சிக்கி விபத்துக்குள்ளானது.
திருப்பத்தூரில் தருமபுரி-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த லாரி, திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. 
இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 
இதேபகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பும், கிருஷ்ணகிரி சாலையில் 3 மாதங்களுக்கு முன்பும் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் லாரி சிக்கி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
எனவே, இனிவரும் காலங்களில் சாலைகள் அமைக்கும்போது தரமான முறையில் அமைத்து, விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com