காட்பாடி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி இறந்தார்.
காட்பாடியை அடுத்த லத்தேரி ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது, சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரயில் மோதியதில் அந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே இறந்தார். தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் அங்கு சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.